சைவம் பற்றிய சில கருத்துக்கள்
சைவம் என்பது ஒரு பெயர்ச்சொல். சிவனை அடித்தளமாகக் கொண்டு வழிபடும் இறைப்பிரிவு.
சைவ சமயம், சிவன் அல்லது சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொள்ளும் சமயம். பிற சில முக்கிய சமயங்கள் போன்று இச்சமயத்தை ஒரு குறிப்பிட்டவர் தோற்றுவிக்கவில்லை. இம்மதத்தினை இன்று 220 மில்லியன் மக்கள் பின்பற்றுகின்றனர்.
மொகெஞ்சதாரோ - ஹரப்பா அகழ்வாராய்ச்சிகளிலிருந்து, ஆரியர் வருகைக்கு முன்பே ஒரு நாகரிகம் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்ததென்பதற்கும் அது திராவிட நாகரிகம் என்பதற்கும் சான்றுகள் கிடைத்தன. இதன் அடிப்படையில் ஜி. யு. போப் அவர்கள் ஆரியர் வருகைக்கு முன்பே தென்னிந்தியாவில் நிலவிய வரலாற்றுக்கு முற்பட்ட சமயமே சைவம் என்கிறார்.
சைவத்தின் வழிபாட்டு முறைகளில் ஒன்று திருவடி வணக்கம், திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பகுதியில் 7 குறளில் திருவடி வாழ்த்து சொல்லுகிறார். சிவம் என்பது தத்துவம். சிவன் என்பது தத்துவத்தின் பெயர்
சைவ சித்தாந்தத்திற்கும் சித்தாந்த சைவத்திற்கும் உள்ள வேறுபாடு
சைவ சமயம் பல பிரிவுகளை உள்ளடக்கியது, வீர சைவம்,சித்தாந்த சைவம்,
காஸ்மீர சைவம். இதில் நாம் அறிய இருப்பது சித்தாந்த சைவம்
சித்தாந்த சைவம் பொருள் சித் = அறிவான ஆனந்த
அறிவினால் அறிந்து அதனை அறிவு உண்மை என்று ஏற்றுக் கொண்டு இறையை உணரக்கூடிய ஒர் வழி
சித்தாந்த சைவம் வாழ்க்கையின் மூலங்களாக பதி (கடவுள்), பசு (உயிர்), பாசம் (கயிறு) இருப்பதாக வரையறுக்கிறது
இறைவன் இருப்பை நிரூபணம் செய்யும் வரையில் நம்பாதே என்கிறது சைவம். ஆக எதையும் ஆய்வுக்குட்பட்ட பின்னரே முடிவுக்கு வருதல் வேண்டுமென்கிறது சைவம்.
----தொடரும்
பின்குறிப்பு: நடைப்பெற்ற வகுப்பில் என்னுடைய குறிப்புகளை மட்டும் தொகுத்து அளித்துள்ளேன். முழுமையாக சைவ சித்தாந்தம் படிக்க முனைவர் ஆறு நாகப்பனின் சித்தாந்த சைவம் நுாலினை நாடுக
2 comments:
நன்றி அண்ணா..தங்கள் வருகைக்கு..தற்சமயம் எழுவதினை நிறுத்தி உள்ளேன்...மீண்டும் திறம்பட எழுதுவேன்..
உங்கள் தகவல் பகிர்வுக்கு நன்றிகள்
மீனாட்சி சுந்தரம்
Post a Comment