Pages

RSS

Welcome to my Blog
Hope you enjoy reading.

Thursday 15 April 2010

சைவ சித்தாந்தம்-3

வகுப்பு 2ல் நான் எடுத்த குறிப்புகளின் சராம்சம் மற்றும் எனது புரிதலும் கூடச் சேர்த்தது பின்வரும் பதிவு
வகுப்பு-2 - தலைப்பு - பதி

பதி என்றால் தலைவன் என்று பொருள், சிவபெருமானே உலகத்தின் முழுமுதற் தலைவன். சத்சித்தானந்தன்
சத் என்றால் மாற்றமில்லாத
சித் என்றால அறிவான
மாற்றமில்லாத அறிவானவன் ஆனந்தமாய் இருப்பவன் சிவன்.
தலைவன் என்றால் மக்களை வழிநடத்திச் செல்லக்கூடியவன். மனிதர்களை அறியாமையிலிருந்து அறிவார்ந்த சூழலுக்கும் துன்பத்திலிருந்து இன்பத்திற்கும் இருளிலிருந்து ஒளிக்கும் அழைத்துச் செல்பவன் பதி.
சித்தாந்த சைவத்தின் சிறப்பே நம்பிக்கை அடிப்படையானது அல்ல. எதையும் ஆராய்ந்து அறிவுப்பூர்வமாக இறையை அடையும் வழியினை கொண்டது. இது ஒர் வகையில் பகுத்தறிவு சமயம் எனலாம் ஏனென்றால் கண்ணுக்கு தெரியாத ஒன்றை இல்லையென நிரூபணம் செய்ய பகுத்தறிவு தேவையேயில்லை. சாதரணமானவர்களே சொல்லுவார்கள். கண்ணுத் தெரியாத ஒன்றை நிரூபணம் செய்யவே பகுத்தறிவு தேவை.
பதி யாபகமானவன் , யாபகம் என்றால் இங்கு இருக்கிறான் என்று பொருள். ஒர் இடத்தினை சுட்டிச் சொல்ல முடியாத ஒன்று
எவ்வாறு மூடி, எழுதும் முள் ,எழுதும் மை, ஆகியவைகள் தனித்தனியாக இருப்பினும் அவை ஒன்றாக சேர்ந்து எழுது கோல் என்று உருவாகின்றது. இது தானாகவே ஒரு மனிதனின் உதவியின்றி உருவாக முடியாது என்பது போல நாம் வாழும் இந்த பிரபஞ்சமானது நாம் வாழத் தகுந்த வகையில் ( அதாவது சரியான அளவு காற்று மழை நிலம் தட்ப வெப்பம் மற்ற வாழத் அத்தியாவசியமான சுழல்கள்) தானாக உருவாக வாய்ப்பில்லை. எனவே அதனை உருவாக்கியவன் பதி
பதியின் நிலை
இறைவனின் உண்மை நிலை சொரூபம். சொரூபம் என்றால் தனித்த ஒருமையான மெய்யான இயல்பு நிலை.
இறைவனே உயிர்களிடத்தே தொடர்பு ஏற்படும் போது தடக்க நிலைக்கு மாறுவிடுகின்றது. எடுத்துக்காட்டாக மனிதர்கள் மற்றவர்களுக்காக அவர்களுடைய உண்மை நிலையிலிருந்து மாறுகின்றோம் இதன் பெயர் தடக்க நிலை.
சிவன் சத்தி இரண்டு உண்டா என்றால் இறைவன் சொரூப நிலையில் ஒருமையானவை (சொரூபத்தில் ஒன்று தடக்க நிலையில் இரண்டு). எனவே தடக்க நிலையில சிவன் சத்தி என்ற இரு நிலைகள் ஆனால் இது ஒருமையுள் இருமை போன்றது.
பதியின் இலக்கணம்
பதி எண் குணத்தான். எட்டு குணநலங்களின் கொண்டவன் இறைவன்.
தலைவனானவன் எத்தகைய பண்புகளை பெற்றிருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணம் பதியின் இலக்கணம். பின்வரும் பண்புகளே அத்தகயவை
இறைவனின் எட்டு குணங்கள்:
1.தன் வயத்தன்
2.இயற்கை அறிவினன்
3.முற்றறிவுடையவன்
4.துாய உடம்பினன்
5.மலமற்றவன்
6.பேராற்றல் உடையவன்
7.பெருங்கருணை உடையவன்
8.பேரின்பம் உடையவன்
-வகுப்பு 3 தலைப்பு பசு (உயிர்) பற்றியது அடுத்த பதிவு
பின்குறிப்பு: நடைப்பெற்ற வகுப்பில் என்னுடைய குறிப்புகளை மட்டும் தொகுத்து அளித்துள்ளேன். முழுமையாக சைவ சித்தாந்தம் படிக்க முனைவர் ஆறு நாகப்பனின் சித்தாந்த சைவம் நுாலினை நாடுக 

0 comments:

Post a Comment