Pages

RSS

Welcome to my Blog
Hope you enjoy reading.

Monday 19 April 2010

சைவ சித்தாந்தம் - 4

வகுப்பு- 3- தலைப்பு பசு

பசு என்றால் உயிர் என்று பொருள் கொள்க. பசு = பச்சு = கட்டப்பட்ட பொருள்
உயிர் கட்டப்பட்ட பொருள் என்றால் கட்டும் பொருள் எது, அதுவே பாசம் (கயிறு) உயிரானது ஆணவம் என்ற மூலத்தால் கட்டப்படடுள்ளது.
சைவ ஆகமங்களாக சரியை, கிரியை,யோகம்,நாணம் ஆகியன. இது போன்று சைவ சித்தாந்தத்தினை விளக்கும் போது நாம் பல சமஸ்கிருதச் சொல்லை பயன்படுத்துகிறோம். ஏனென்றால் சைவ சித்தாந்த பழைய தமிழ் மொழியிலிருந்து சமஸ்கிருதம் சென்று மீண்டும் தமிழுக்கு வரும் போது அம்மொழிச் சொற்களையும் சேர்த்தே கொண்டு வந்ததது.  இதற்கான வரலாற்றுச் சான்றுகள் இருப்பதாக வகுப்பாசிரியர் சொன்னார் ஆனால் இன்னது என்று எடுத்துரைக்க நேரம் இல்லை எனக்கும் படிக்க வாய்ப்பு கிட்டவில்லை இது பற்றி எழுத படித்த பின்பு எழுதலாம் என்று எண்ணியுள்ளேன்.
உயிர் ஆணவம் என்ற மூலமலத்தால் (மலங்கள் சைவ சித்தாந்தப்படி மூன்று வகைப்படும் அவைப்பற்றி பின்வரும் பதிவுகளில் பார்க்கலாம்) கட்டப்பட்டுள்ளது
உயிர் இருப்பதற்கான நிரூபணம்
                  சில இந்திய மதத் தத்துவங்கள் உயிர் இல்லை என்று சொல்வதுண்டு.
• பெளத்தமோ உயிர் பற்றி “உள்ளதும் அல்ல இல்லதும் அல்ல என்பது எதுவே அதுவே உயிர் என்கிறது”
• உடம்புதான் உயிர் என்கிறது தேகஆன்மவாதிகளின் மதம்
• ஐம்பொறிகள் தான் உயிர் என்கிறார்கள் இந்திரிய ஆன்மவாதிகள்
சைவத்தின் எதிர்வாதம்
உடம்பு சடப்பொருள் எனவே உயிராகாது.
ஐம்பொறிகளும் சடப்பொருள், கண் பார்க்கிறது என்றால் கண் மூலமாக உயிர் பார்க்கிறது, கண் மூலமாக மூளை பார்க்கிறது என்றால் மூளை எதன் மூலமாக பகுத்தறிகின்றது, மூளையும் ஒரு சடப்பொருள் தான்.
பெளத்தத்தின் உயிர் கருத்துக்கு அவர்கள்தான் விளக்கமாக விளக்கமளிக்க வேண்டும் !
• மனம்,புத்தி , சித்தம் , அகங்காரம் ஆகிய நுண் கருவிகள் தான் உயிர் என்கின்றனர் அந்தர் கர்ம ஆன்மவாதிகள்
• பிராண வாயு தான் உயிர் என்கின்றனர் பிராண ஆன்ம வாதிகள்

• ஐம்பொறி பிராண வாயு அந்தக்கரணம் (8) மூன்று சேர்ந்ததுதான் உயிர் என்கின்றனர் சமூக ஆன்மவாதிகள்
• பிரம்மமே உயிர் என்கிறது வேதாந்தம்
சைவ சித்தாந்தமோ இதுதான் உயிர் என்று சொல்லவில்லை, மேற்சொன்ன அனைத்தும் அல்லாதது தான் உயிர்
நிரூபணம்
உடம்பை நடத்துகின்ற ஒன்றே உயிர் உடம்பின் செயல்களை நடக்க அனுமதிக்கின்ற ஒன்றே உயிர்
இலக்கணம்
வேதாந்திகள் அவர்களின் உயிர்ப் பற்றிய கருத்துக்களை நிலைநாட்ட மாணிக்கவாசகரின்,
“சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட 
அத்தன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே” என்று திருவாசகத்தின் அச்சோப் பதிகத்தில் பாடியிருக்கிறார். எனவே பிரம்மம் ஒன்றே. உயிர் சிவத்துடன் (பிரம்மத்துடன்) இரண்டற கலந்து விட்ட நிலையில் உயிர் தனி பிரம்மம்(சிவம்) தனி எனப் பிரிக்க முடியாது.
ஆனால் சைவமோ உயிர் சிவத்துடன் கலக்கும் ஆனால் எப்படி என்றால் “அப்பிரு உப்பு போல” என்று (தண்ணீரில் உள்ள உப்பு போல). ஆனால் வேதாந்திகளோ அப்பு மட்டும் இருக்கும் உப்பு இருக்காது என்கின்றனர்.
• உயிர் அநாதி (அநாதி = தோற்றம் அழிவு இல்லாதது)
• இறைவன் உயிரை படைக்கவில்லை என்கிறது சைவ சித்தாந்தம்
• உயிர்கள் பல. அவற்றின் அனுபவங்கள் பொறுத்து மாறுபடுகின்றது
• உயிர்கள் சார்ந்து அதன் வண்ணமாதல், எதைச் சார்கின்றதோ அதன் வண்ணமாகின்றது
• அழுந்தியே அறியும் தன்மை பெற்றது உயிர் (பதி (இறைவன் அழுந்தி அறியவேண்டியதில்லை, அவன் முற்றறிவுடையவன்)
• ஒன்றை அறியும் போது மற்றொன்றை அறியாது
-தொடரும்

பின்குறிப்பு நடைப்பெற்ற வகுப்பில் என்னுடைய குறிப்புகளை மட்டும் தொகுத்து அளித்துள்ளேன்,,முழுமையாக சைவ சித்தாந்தம் படிக்க முனைவர் ஆறு நாகப்பனின் சித்தாந்த சைவம் நுாலினை நாடுக

0 comments:

Post a Comment