Pages

RSS

Welcome to my Blog
Hope you enjoy reading.

Wednesday 30 June 2010

சைவ சித்தாந்தம் - 6

வகுப்பு -2- தலைப்பு- கன்மம்

மும்மலங்களில் ஒன்றான ‘கன்மம்’ என்பதன் வடச்சொல் (தமிழர்களுக்கு வடச்சொல்லில்தான் பொருள் புரிகிறது ) கர்மா, சரியான தமிழ்ச்சொல் ‘வினை’

இந்திய பெரும்பான்மை மதங்கள் வினைக் கோட்பாட்டினை ஏற்றுக் கொள்கின்றன,எல்லா வினைகளுக்கும் விளைவு உண்டு ( நியூட்டனின் 3ம் விதி (சூர்யா படம் இல்லீங்க இது இயற்பியல் தத்துவம்). மூலகன்மம் நல்வினை தீவினை என்ற பாகுபாடு கிடையாது, வினை என்றால் ஒர் செயல், செயிலின் விளைவைப் பொறுத்தே வினைத்தன்மை நிர்ணயக்கப்படுகிறது


கன்மத்தின் (வினையின் இலக்கணம்)
• வினை ஒர் சடப்பொருள்
• வினை தானாக உயிரை சென்று பற்றாது,
• வேதாந்திகளும் முன்வினைப்பயன்,விதிப்பயன் கொள்கைகளை ஏற்றுக்கொள்கின்றனர், பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படையில் சில பண்புகள் இருக்கின்றன் அதற்குக் காரணம் முன்வினைப்பயனே
• சைவ சித்தாந்தம் டார்வினின் பரிணாமக் கொள்கைக்கு எதிரானது,ஒரே கால கட்டத்தில் புல் பூச்சி மற்ற எல்லா உயிரனஙகளும் தோன்றின என்கிறது சைவம்
• உயிர்களின் இயல்புக்கு மாறாக இறைவன் கூட செயல்பட முடியாது

• மனம்,வாக்கு, உடம்பு ஆகியவற்றின் உதவியால் உயிர் வினை புரிகின்றது,
மேற்கூறிய மூன்றும் அறிந்தும் அறியாமலும் என மொத்தம் அறுவகை வினை

“ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும் “ என்ற சிலம்புச் செய்தியிலிருந்து சமணமும்
(சிலம்பு இயற்றிய இளங்கோவடிகள் ஒர் சமணத் துறவி) வினைக் கோட்பாட்டினை ஏற்றுக் கொள்கிறது

வினைப்பயனிலிருந்து நீங்குதல்

கொன்றால் பாவம் தின்றால் தீரும் என்றால் கொன்றால் பாவம் தான் பாவத்தினை தின்றால் அனுபவித்தால் தீரும் என்று பொருள் கொள்க, கொன்றதை தின்றால் அல்ல.

• வினைப் பயனை அனுப்பவித்தல்

• வினைப் பயன் இறைவன் திருவருளால் நீ்ங்கும்

• வினையை நல்வினை தீவினை என்றில்லாமல் சமமாக பாவித்தால் வினைப்பயன் நீங்கும்

பின்குறிப்பு நடைப்பெற்ற வகுப்பில் என்னுடைய குறிப்புகளை மட்டும் தொகுத்து அளித்துள்ளேன்,,முழுமையாக சைவ சித்தாந்தம் படிக்க முனைவர் ஆறு நாகப்பனின் சித்தாந்த சைவம் நுாலினை நாடுக

தவிர்க்க முடியாத காரணங்களினால் அதன் பிறகு நடந்த வகுப்புகளில் நடந்தவைகளை குறிப்பு எடுக்க முடியவில்லை, மேலும் அந்த வகுப்புகளின் பொருளும் முழுமையாக என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை
இப்போதுதான் ஆறு நாகப்பன் ஐயா எழுதிய சித்தாந்த சைவம் என்ற நுாலின் மலேசியாவிலிருந்து வாங்கி உள்ளேன்,,,படிக்க படிக்க பதிவுகளும் வரும் 

0 comments:

Post a Comment